தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியான முன்னணி தொடர்களில் ஒன்றான ராஜா ராணி தொடரில்
ஜோடியாக நடித்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருபவர்கள் முன்னணி சீரியல் பிரபலங்களான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் இருவரும் இணைந்து பல தொடர்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் தற்போது இருவரும் தனி தனி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா சன் டிவியில் இனியா
தொடரில் நடித்து வரும் நிலையில் அதே சேனலில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு இருவரும் பிசியாக தொடர்களில் நடித்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வரும்
நிலையில் இது குறித்து கேட்கையில், அவர்கள் சண்டை போடுவது போல காட்டி இப்படி தான் எங்களை பற்றி எழுதுகிறார்கள் எனவும் அதுவும் டைவர்ஸா எங்களுக்கா நெவர் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..
View this post on Instagram