“நீ என்ன அரவிந்த்சாமி மாறி அவ்ளோ அழகா” என்ற வாக்கியம் ஒன்று போதும் நடிகர் அரவிந்த்சாமி மக்கள் மனதில் இடம் அந்த அளவிற்கு இடம் பிடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 90களில் வலம் வந்தவர்.அரவிந்த் சாமி அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான தளபதி படத்தில் ரஜினி, மமூட்டி என முன்னணி நடிகர்கள் நடித்த அந்த படம் தான் இவரை பல மக்களை திரும்பி பார்க்க வைத்தது.

இவர் கிட்டத்தட்ட 20படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து பல ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இருந்து வருகிறார்.இவர் தமிழில் ரோஜா, பாம்பே, மின்சார கனவு, என் சுவாச கற்றே போன்றபல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பரந்த இவர் பின்பு சினிமா துறையை விட்டு சிறுது காலம் நடிக்காமல் இருந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வகையில் கடல் மற்றும் தனி ஒருவன் மூலம் வில்லனாக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.தனி ஒருவன் படத்தில் படு மாஸ் கேரக்டர்யில் நடித்து மக்களை கவர்ந்தார்.தற்போது அரவிந்த் சாமியின் மகன் ருத்ரா சாமியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அரவிந்த்சாமி மகனா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறார்கள்.



