காமெடி நடிகர் செந்தில் என்றல் தெரியாத ஆளே கிடையாது .ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர்.செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள்.
அதிலும் குறிப்பாக அந்த வாழபல காமெடி இன்னும் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளது.அவர் நடித்த முதல் படம் ஒரு கோவில் இரு தீபங்களிருந்து .விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் வரை இவர் நடிப்பில் மயங்காத ரசிகர்களே கிடையாது.
இவர் கவுண்டமணியுடன் இணைத்து அதிக படங்களில் நடித்துள்ளார் .இவர்கள் இருவரும் 80’s மற்றும் 90’s குழந்தைகளுக்கு ரொம்ப புடிக்கும்.இவர்கள் இருவரும் திரையில் வந்தால் போதும் மக்கள் அனைவரும் சிரித்து விடுவார்கள்.
காமெடிக்கு என்றே வாழ்ந்த இவர் இப்போது படம் நடிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் செந்தில் அவர்கள் தற்போது பிரபல தொலைகாட்சியில் சீரியல் தொடரில் நடிக்கவிருக்கிறார் . இதை கேட்ட ரசிகர்கள் பெரிதும் மனம் உடைந்து போனார்கள்.எவ்ளோ பெரிய காமெடி நடிகருக்கு இப்டி ஒரு நிலைமையா என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.