தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா துறைக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் கொடுத்தவர் நடிகை குஷ்பூ.நடிகைகளுக்கு என்றுமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் தற்போது உள்ள நடிகைகளாக வலம் வரும் அனைவர்க்கும் அவர்களுக் கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் நடிகை குஷ்பூ அவர்களுக்க அவரது ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படமான தர்மத்தின் தலைவன் படம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.
நடிகை குஷ்பூ அவர்கள் பிரபல இயக்குனரான சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது கருத்துகளையும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருவர்.
அண்மையில் நடிகை குஷ்பூ வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவரது கண்களில் கட்டுடன் காணப்பட்டார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.மேலும் அதற்கான பதில் அவர் கூறுகையில் எனது கண்ணில் கத்தியால் இன்று காலை காயம் ஏற்பட்டது.மேலும் மருத்துவமனைக்கு சென்று கண்களுக்கு கட்டு போட்டு கொண்டதாகவும் கூறியுள்ளார்.இன்னும் சிறுது நாட்களுக்கு என்னால் எனது சமுக பக்கங்களில் அக்டிவாக இருக்க முடியாது என்னை மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லி உள்ளார்கள்.மேலும் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் முக கவசம் மற்றும் சமுக இடைவெளியை கடைபிடியுங்கள் என கூறியுள்ளார்.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020