தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தியானது தற்போது திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் பெரும் சங்கடமான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் தற்போது பல நடிகர்களின் மறைவு மக்களின் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் பிரபல நடிகரான சுஷாந்த் அவர்களின் மரணம் திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மற்றும் எல்லோரையும் பெரும் அதிர்சியில் ஆழ்த்தியது.தற்போது பலம் பெரும் பாடகரான ஏ. எல். ராகவன் அவரது மறைவு தற்போது தமிழ் சினிமா துறைக்கு ஒரு பெரிய இழப்பு தான்.

ஏ. எல். ராகவன்அவர்கள் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பாடல்களை பாடியுள்ளார்.இவர் அன்றைய கால கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜாம்பவான்கள் அனைவரிடமும் இவர் பணியாற்றி இருக்கிறார்.மேலும் இவருக்கு வயது 87 ஆனா நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் காலை 7.30மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இவரது மறைவு தமிழ் சினிமா வில் ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பாகும்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இந்த செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
