சினிமா துறைகளில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் விஷயம் என்றல் அந்த இசை தான்.இசைக்கு மயங்காத ஆளே கிடையாது.அந்த நல்ல இசையை நமக்கு படங்களில் தருவது ஒரு இசையமைப்பாளர் கையில் தான் இருக்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமா வில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.அதில் அனிருத் அவர்கள் தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர் ஆவார்.

இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை தனுஷ் நடித்து வெளியான மூணு படம் மூலம் தமிழ் சினிமா திரைக்கு அறிமுகமாகினார்.இவர் பின்பு பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் அவர்கள் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.இவர் கத்தி, வேதாளம், விவேகம், தர்பார் போன்ற படங்களுக்கு மியூசிக் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார்.இவர் படங்களுக்கு இசை அமைப்பது மட்டுமல்லாமல் இவர் தனியாக ஆல்பம்களை ரிலீஸ் செய்துள்ளார்.

தற்போது இவர் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இவர் எட்டு வருடத்திற்கு முன்னால் இவர் ஒரு கல்யாண கச்சேரி ஒன்றில் பியானோ வாசித்துள்ளார்.அந்த வீடியோ வை பார்த்த ரசிகர்கள் அதனை சமுக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.அதனை கண்ட இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் அந்த வீடியோவை பார்த்து இதை உருவாக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோ அவர் மனதை உருக்கியது என தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
A video of me playin keys at a wedding katcheri bout 8 years ago.. thanks to the person who made this video..truly heartwarming! https://t.co/kaHj5M1oLi
— Anirudh Ravichander (@anirudhofficial) April 3, 2020