தனது முதல் படத்தின் மூலம் புகழின் உச்சதிகே சென்றவர் தான் நடிகை சாய் பல்லவி.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக தோன்றி இருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் இவர் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமாக வில்லை.அனால் மலையாள படமான பிரேமம் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சாய் பல்லவி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமா துறையில் தற்போது அதிகபடியான படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு தற்போது சினிமா மார்க்கெட்டில் பெரும் டிமாண்டு இருந்து வருகிறது.நடிகை சாய் பல்லவி அவர்கள் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் நடிகைகள் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.இந்நிலையில் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நோக்கில் எல்லையை மீறியும் நடிக்க தயாராகி வரும் நடிகைகளின் மத்தியில் நடிகை சாய் பல்லவி அவர்களிடம் சற்று கவர்ச்சியாக நடிக்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
மேலும் நடிகை சாய் பல்லவி அதற்கு நீங்கள் கவர்ச்சியாக நடித்தால் உங்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும் என கூறியுள்ளார்.அனால் அதற்கு நடிகை நான் 20வருடங்கள் கழித்து என் வயதான காலத்தில் என் குடும்பத்துடன் முகம் சுளிக்காத வாறு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும் தயாரிப்பாளர்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வேறு நடிகையை பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளார்கள்.