இன்றைக்கு தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் பலரும் சினிமாவை விட்டே விலகி வரும் நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா. நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என
அடம்பிடிக்கும் நடிகைகள் மத்தியில் கதைக்கு ஏற்ப அந்த கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பின்னணி குரல், பாடகி, பாடலாசிரியர் என பன்முக துறைகளில் கலக்கி வருகிறார் மேலும் சமீபத்தில் கூட இவரது குரலில் வெளிவந்த ஊ சொல்றியா பாடல் வேற லெவலில் டிரென்ட் ஆனது. தற்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அம்மிணி பிசியாக பல
படங்களில் நடித்து வருகிறார் அதிலும் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் மாறுபட்ட கதபாத்திரத்தில் நடித்து வருகிறார் . அதேபோல் வாரிசு நடிகரான சிபிராஜுடன் இணைந்து வட்டம் எனும் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மதுபானக்கடை படத்தை இயக்கிய இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின்
ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ட்ரியா பேசுகையில் சிபி மிகவும் கூலான மனிதர் அவருடன் நடித்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் அதுவும் சூட்டிங் சமயத்தில் இரவில் அவருடன் காரில் ஊர் சுற்றுவது கையேந்தி பவனில் சாப்பிட்டது எல்லாம் வித்தியசமான அனுபவமாக இருந்தது என கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…