தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ராம் சரண் தெலுங்கு மொழியை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் இவருக்கு தெலுங்கு மொழியை தாண்டி தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி ரசிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு தனது நேர்த்தியான நடிப்பு மற்றும் புயல் போன்ற நடன திறமையால் பலரையும்
வெகுவாக கவர்ந்து ரசிகர்களாக மாற்றி வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பிரபல முன்னணி நடிகரான சீரஞ்சிவியின் மகனான இவர் தனது அப்பாவின் பிரபலத்தை மிஞ்சும் அளவிற்கு படங்களில் மாசாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் படம் வேற லெவலில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது உலகளவில் பிரபலமானது. இதனைதொடர்ந்து
ராம்சரண் தற்போது பிரபல முன்னணி இயக்குனரான சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் ராம்சரண் அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் கடந்த நிலையில் இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்காமல் இருந்த நிலையில் தங்களது குழந்தைக்காக இருவரும்
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல நடிகரான சீரஞ்சீவி தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தான் தாத்தா ஆகிவிட்டதாகவும் எனது மருமகள் உபாசனா கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ராம்சரண் -உபாசனா ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…….
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022