தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர். அந்த வகையில் கமல்ம, ரஜினி விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது கொழுக்மொழுக் அழகால் பலரையும் தனது வலையில் விழ வைத்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி
நடிகையான குஷ்பூவையே சேரும். மேலும் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூ ஒருவருக்கு மட்டுமே இந்த அளவிற்கு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறையவே அரசியல் பக்கம் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இதையடுத்து பல வருடங்கள் சினிமா
பக்கமே வராமல் இருந்த நிலையில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மேற்கொண்டு பட வாய்ப்புகள் வரும் நிலையில் தனது உடல் எடையை குறித்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பூ. அதனை வெளிபடுத்தும் விதமாக சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பல மாடர்ன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
மேலும் இதை தொடர்ந்து லண்டன் சென்று அங்கு போடோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பலரும் அவர் அங்கு சொந்தமாக சொகுசு வீடு வாங்கிவிட்டதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த குஷ்பூ லண்டனில் வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்பதாகவும் சொந்தமாக எல்லாம் வீடு வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இனி முழுநேரமாக சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் …..