சினிமாவில் தொடக்கத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர்களும் இன்றைக்கு ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் பல முன்னணி நடிகர்களில் படங்களில் குணசித்திரம், வில்லன் என பல கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தனது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து
திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பாபி சிம்ஹா . இதையடுத்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடிப்பதை தாண்டி பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் பாபி சிம்ஹா குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில்
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அதன்படி பாபி சிம்ஹா கொடைக்கானலில் சொந்தமாக வீடு ஒன்றை கட்ட எண்ணி தனது நண்பர் ஒருவருடன் சுமார் இரண்டு கோடி வரை பணத்தை கொடுத்த நிலையில் அவரது நண்பர் மற்றும் சிலர் அவருக்கு வீட்டை சரிவர முடித்து தராமல் இருந்து வந்த நிலையில் இது குறித்து பாபி சிம்ஹா கேட்ட போது இவரை தீர்த்து கட்டிவிடுவோம் என்பது போலா
மிரட்டல்களை விடுத்து வருகிறார்களாம் . இதன் காரணமாக மிரண்டுபோன பாபி சிம்ஹா அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் இதன் பேரில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………