தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களாக அஜித்குமார் நடிப்பில் அவ்வளவாக படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் துணிவு திரைப்படம் வெளியாகி
தல ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. இந்த படத்தை அடுத்து அஜித்குமார் அவர்கள் அடுத்ததாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு ஆஷார்பைசனில் நடந்து வரும் நிலையில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதையடுத்து இந்த படத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் படபிடிப்பு தளத்திலேயே காலமாகி உள்ள
தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில் இந்த படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த மிலன் நேற்று காலை காலமானார். இவர் விடாமுயற்சி படபிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே இவர் காலமானார். மேலும் அவரது
உடலை ஆஷர்பைசனில் இருந்து சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது இதனையடுத்து இந்த படத்தில் மிலன் கலை இயக்குனராக வேலை பார்த்து வந்த நிலையில் அவர் காலமானதை அடுத்து அவரது முழு வேலைகளையும் அவரது மகன் கவனித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி திரை பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்………………….