பொதுவாகவே திரையுலகில் இருப்பவர்களை பற்றிய வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்று எனலாம் மேலும் இது போன்ற வதந்திகளில் சிக்காத நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் . இப்படியொரு நிலையில் கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் குறித்த பல கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இதில் பலவும் அவர்களது திருமணம் மற்றும் காதல் குறித்ததாக தான் இருக்கும் . இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ப்ரேமம் திரைபடத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக தன்னை
அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை சாய் பல்லவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்கே 21 படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் பட பூஜையில் கலந்து
கொண்ட நிலையில் அதில் இயக்குனருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் இவருக்கு திருமணம் முடிந்து விட்டதாக பல வதந்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில் இதை கண்டு கோபமான சாய் பல்லவி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் ‘எனக்கு வதந்திகள் பற்றி கவலை இல்லை , ஆனால் அதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு இருக்கும் போது நான் பேசிய ஆக வேண்டும் “.
படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோவை கிராப் செய்து இப்படி தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள். என் படம் குறித்த நல்ல அறிவிப்புகளை வெளியிடும் நேரத்தில் இப்படி வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலைகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இது மாதிரியான செயல்களை செய்வது இழிவானது என மிகுந்த கோபத்துடன் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………