பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் . இவர் அந்த சீசனில் இறுதி வரை வந்தது மட்டுமின்றி இரண்டாவது இடத்தையும் பிடித்து இருந்தார் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவர் பல முன்னணி
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அண்மையில் இவர் மீது காவல் துறையில் வழக்கு ஒன்று பதிவாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இவ்வாறு இருக்கையில் இது குறித்து விசாரிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிருபா முனுசாமி எனும் பெண் வழக்குரைஞர் இவர் மீது வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார் அதில் விக்ரமன் தன்னை திருமணம் செய்து
கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிய நிலையில் இந்த புகார் தற்போது மீண்டும் எழுந்த நிலையில் இவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்ததை அடுத்து எஸ்சி , எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் , பாலியல் வன் கொடுமை சட்டம் உள்பட பல
பிரிவுகளை இவர் மீது போலீசார் பதிவு செய்த நிலையில் இவரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….