திரையுலகில் இன்றைக்கு படங்களில் நடிக்கும் பல பிரபலங்கள் படங்களில் ஜோடியாக நடிப்பதை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபல நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும்
இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு தேவ் எனும் மகனும் தியா எனும் மகளும் உள்ளார்கள் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஜோதிகா சில காரணங்களால் சூர்யாவை விவாகரத்து செய்யபோவதாக பல
தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இதையடுத்து இது குறித்து கேட்கையில் இருவருக்கும் படங்களில் நடிப்பது குறித்து தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் அது பெரும் பிரச்சனையாக முற்றிய நிலையில் இந்த முடிவுகள் வந்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா, தான் தற்போது பட வேலை காரணமாக
மும்பைக்கு வந்திருக்கும் நிலையில் அதன் காரணமாகவே தனது பிள்ளைகளையும் இங்கு அழைத்து வந்து இருக்கிறேன் அவர்களது படிப்பு எனக்கு மிகவும் முக்கியம் இதை தவிர எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதோடு சூட்டிங் மறுகணமே நாங்கள் சென்னை திரும்பி விடுவோம் எனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது………………………..