சன் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான ரோஜா சீரியலில் கதையின் நாயகியாக நடித்து தனது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல
முன்னணி சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி. தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் பல முன்னணி தொடர்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் சீதா ராமன் தொடரில் நடித்து வந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட
நாள் காதலரை மலேசியாவில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது திருமண புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரியங்கா நல்காரி தனது இணைய பக்கத்தில் தனது கணவருடன் இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கி விட்டாராம்
அதோடு இருவரும் பிரிந்து விட்டார்களாம். அதுமட்டுமின்றி பிரியங்கா நல்காரி இணைய பக்கங்களில் இருந்து முற்றிலுமாக விலக இருப்பதாகவும் கூறியுள்ளார் இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு பலவிதமான கருத்துகளையும் கூறி வருகின்றனர்………………
View this post on Instagram