தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை வளர்ந்து வருவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். மேலும் சொல்லப்போனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக பல படங்களில் நடித்து வரும் நடிகைகளில் பெரும்பாலனோர் சின்னத்திரையில் இருந்து வந்தவர்களே எனலாம். இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான
பிரபல முன்னணி தொடரான தெய்வமகள் சீரியல் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை வாணி போஜன். தனது நடிப்பு மற்றும் வசீகரமான அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன் சீரியலை அடுத்து படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் படி பல படங்களில் குணசித்திர ரோல்களில் நடித்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ட்ரிபிள்ஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இதனையடுத்து
அடுத்தடுத்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில்வாணி போஜன் காதல் வலையில் விழுந்தது மட்டுமின்றி அவரே கதியென கடக்கும் நிலையால் இயக்குனர்கள் யாரும் இவரிடம் கதை சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வாணி போஜன் கடந்த சில மாதங்களாக நடிகர் ஜெய்யை காதலித்து வருவதோடு அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக இவரது பட வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவி போன வண்ணம் உள்ளது இந்நிலையில் இது குறித்து அவரது
நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அவருக்கு தொடர்ந்து அறிவுரைகளை கூறிய நிலையில் தற்போது தனது காதல் மயக்கத்தில் இருந்து வெளிவந்த வாணி போஜன் தனது பட வாய்ப்புகள் இல்லாமல் போனதை எண்ணி அறிந்து கொண்டு நல்ல முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதனை உறுதிபடுத்தும் வகையில் தனது இணைய பக்கத்தில் எனக்கு சினிமா மட்டும் தான் முக்கியம் வேறு யாரும் எனக்கு தேவையில்லை நான் இப்போது உசாராகி விட்டேன் என பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்த்தால் வாணி போஜன் ஜெயுடன் உண்டான காதல் உறவை முறித்து கொண்டது அப்பட்டமாக தெரிவதாக பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர் ….