முன்னை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை எட்டிய நிலையில் கடந்த வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறி இருந்தார் இதையடுத்து பாவா செல்லத்துரை தாமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் . இறுப்பினும் பிக்பாஸ் வீட்டில் துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிலையில் சக போட்டியாளர்கள் இடையே முதல் நாளில் இருந்தே சண்டைகளும் விவாதங்களும் தொடங்கிய
நிலையில் அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது எனலாம். இப்படி இருக்கையில் கடந்த வாரம் கமல் அவர்கள் விஜய் வர்மாவிற்கு வார்னிங் கார்டு கொடுத்திருந்தார் மேலும் இந்த கார்டை மூன்று முறை வாங்கினால் அடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பபடுவார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் வீட்டினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது
என ஸ்ட்ரைக் செய்து வரும் நிலையில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை அனுப்புமாறு கூறி வரும் நிலையில் யாரும் வராததை அடுத்து இறுதியாக கேப்டன் விக்ரமே நானே வந்து வேலை செய்கிறேன் என கூறியதை அடுத்து அனைவரும் சமாதானம் ஆனார்கள். இந்நிலையில் இதில் விக்ரமிற்கும் பிரதீப்க்கும் இடையில் வாக்குவாதம்
எல்லைமீறிய நிலையில் அதில் இருவரும் கண்டபடி பேசிக்கொண்டதை அடுத்து அதில் பிரதீப் வாயை உடைச்சிருவேன் என வன்மையாக பேசிய நிலையில் இதனை பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கண்டித்த நிலையில் இந்த வாரம் கமல் அவர்கள் இவருக்கு ரெட் கார்டு கொடுக்க அதிகளவு வாய்ப்பு இருப்பதாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………….