திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் . படங்களில் ஹீரோயினாக நடிப்பதை தாண்டி பின்னணி பாடகி , தயாரிப்பாளர் என பல துறைகளில் கவனம் செலுத்தி
வருகிறார் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனது காதலனுடன் லிவிங் முறையில் இருந்து வரும் நிலையில் அவ்வளவாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தெலுங்கில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் மேலும் பிரபாசுக்கு ஜோடியாக சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். இவ்வாறான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசன் அதில் பேசுகையில் ,தான் ஒரு காலத்தில் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார். நான் தினமும் பார்டிக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன் இருந்தும் ட்ரக்ஸ் பயன்படுத்தியது இல்லை ஆனால் எனக்கு ஆல்ககால் தான் பெரிய விசயமாக இருந்தது எப்போதும் நண்பர்களுடன் இணைந்து குடித்தேன் சொல்லப்போனால் அதுதான் என்னை
கண்ட்ரோல் செய்தது இதனால் ஒரு கட்டத்தில் அதில் இருந்து வெளியே வரமுடியாமல் இருந்ததை அடுத்து என்னை பார்டிக்கு அழைக்கும் நண்பர்களை தவிர்த்தேன் . அதோடு அதில் இருந்து மீண்டு வந்து இன்றோடு எட்டு வருடங்களுக்கு மேலாக ஆகிறது என ஓபனாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………