தற்சமயம் உலகளவில் பெரிதளவில் பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று வட இந்தியாவில் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா குறித்ததாக தான் இருக்கும். காரணம் அந்த வகையில் அதன் ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில்
அமைக்கபட்டு இந்த நிகழ்வில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் இந்த நிகழ்ச்சியில் இலட்சகணக்கான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது . இதையடுத்து இந்த விழாவில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளும் நிலையில்
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்ட நிலையில் ராம் சரண், மோகன்லால், சிரஞ்சீவி ,அலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர்
கபூர் போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………