தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தென்னிந்திய அளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ராம்சரண். இவர் பிரபல முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி அவர்களின் மகனாக இருந்த போதிலும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே சினிமா
உலகினர் மற்றும் மக்கள் மத்தியில் வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் செஞ்சார் படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்
இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்த வகையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருந்தது மேலும் அந்த குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டியிருந்தார். இப்படி இருக்கையில் ராம் சரண் மற்றும் உபாசனா அவர்களது வேலையில் மிகவும் பிசியாக இருக்கும் நிலையில் அவர்களது மகளை பார்த்து கொள்வதற்கு சாவித்திரி எனும்
பெண்ணை வைத்துள்ளனர். இவர் இதற்கு முன்னர் பாலிவுட் நடிகையான கரீனா கபூர் உள்பட பல முன்னணி திரை பிரபலங்களின் பார்த்து கொண்ட நிலையில் இவருக்கு மாதம் சம்பளமாக சுமார் ஐந்து லட்சம் வரை வழங்கபடுவதாக கூறபடுகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………..