பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ள போதும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதோடு சமூகவளைதலங்களில்
எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசிய போது, நான் பெங்களூருவில் இருந்த போது ராஜாராணி பட வாய்ப்பு வந்தது அந்த சமயத்தில்
நான் மாடலிங் செய்து வந்தேன். எனது காஸ்டிங் ஏஜென்சியை தொடர்புகொண்டு ராஜாராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் படத்தில் ஆர்யா ஹீரோ மற்றும் நீங்கள் இரண்டாவது ஹீரோயின் என கூறினார்கள் அப்போது எனக்கு தயாரிப்பு குறித்து எல்லாம் அவ்வளவாக தெரியாது. அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை என நம்பினேன் அவர்கள் கூறியவாறு இரண்டு நாட்கள் சூட்டிங் சென்றேன் அதன் பிறகு எந்தவொரு
அழைப்பும் வரவில்லை . இறுதியில் பார்த்தால் படத்தின் சூட்டிங் முடிந்து படம் ரீலிஸ் ஆகிவிட்டது அப்போதே இது குறித்து இயக்குனரிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்க வேண்டும் பேசாதது எனது தப்பு தான் என வன்மையாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………….