தற்போது திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சுயமாக பல ஆடம்பர தொழில்களை செய்து அதன் மூலமாக பல கோடிகளில் வருமானம் சம்பாதித்து வருகின்றனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது நடிப்பு மற்றும் வசீகரமான அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக இன்றளவும் வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த
நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சிம்ரன் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக ஹோட்டல் பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார் அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் பிரமாண்ட ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த ஹோட்டல் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஹோட்டலில் இருவர் அமர்ந்து சாப்பிட டேபிள் புக் செய்தால் சுமார் 700 ஆகுமாம். மேலும் ஒரு ஆம்லேட்டின் விலை மட்டும் 300-ல் இருந்து ஆரம்பமாம் சாதாரண கார்லிக் ப்ரெட்டின் விலை 130, பேபிகார்ன் 280, சிக்கன் லாலிபாப் 280, வருத்த நண்டு 380 என விற்கபடுகிறது. அதோடு அணைத்து விதமான சைவ உணவுகள் சேர்ந்த தட்டு 1000 ஆகுமாம் அசைவ உணவுகள்
சேர்ந்த தட்டு சுமார் 1500 , சாதாரண ஐஸ்க்ரீம் விலை மட்டுமே 150-ல் துவங்குகிறது. அதவிடுங்க சாதாரண தாளித்த பருப்பின் விலை சுமார் 210 என அதிக விலைக்கு விற்பனை செய்யபடுகிறது. இருப்பினும் கடற்கரை ஓரத்தில் இருக்கும் நிலையில் கூட்டம் அலைமோதி கல்லா வேற லெவலில் குவிந்து வருகிறதாம். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………….