கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த திரையுலகமும் மற்றும் மக்கள் அனைவரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான். 90-களின் காலகட்டத்தில் இருந்து பல நூறு படங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்து வருவதோடு தென்னிந்திய திரைப்பட சங்க தலைவராக
இருந்து வந்தது மட்டுமின்றி அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தேமுதிக கட்சியை நிறுவி அதை வழிநடத்தி வந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாரதவிதமாக சிகிச்சை பலனின்றி காலமானார் இந்நிகழ்வு பலரையும் உறைய
செய்த நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சகணக்கான மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவரது மனைவி பிரேமலதா அந்த துயரத்தில் இருந்து இன்னமும் மீளாமல் இருக்கும் நிலையில் அவரது கணவர் கேப்டன் நினைவாக அவருக்காக செயல் ஒன்றை செய்துள்ளார். அந்த
வகையில் கேப்டன் அவர்களின் நினைவுகூறும் வகையில் அவரது முகத்தை தனது கையில் டாட்டூவாக போட்டு கொண்டுள்ளார் . இப்படி இருக்கையில் அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் விஜயகாந்த் அவர்களின் மகன் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதைபார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்………………….
View this post on Instagram