பொதுவாக சினிமாவில் நடிக்கும் பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி அடுத்த கட்டமாக அரசியல் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து பல திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சி தொடங்கி நாட்டை ஆண்டுள்ளனர் . அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் இனி சினிமாவில் நடிப்பதை விடுத்து மக்களுக்காக போராடும்
வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியை நிறுவி முழுநேரமாக அரசியல் வாதியாக செயல்பட போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்த கட்டமாக பிரபல நடிகரும் நடிகர் சங்க நிர்வாகியுமான விஷால் அவர்கள் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து கேட்கையில், சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக
நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைபட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை ” நன்றி மறப்பது நன்றன்று ” என்று வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே தான் இருப்பேன். அது எனது கடமை என மனரீதியாக நான்ஏற்றுகொள்கிறேன் என கூறியுள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது……………………..